Friday, September 14, 2007

புனித நோன்பின் அருமை....!

இசுலாமியச் சகோதரர்கள் தங்கள்புனித நோன்பை
இன்று துவங்குகிறார்கள்.

சகோதரர்கள் நோன்புக்காலத்தில் எண்ணிய
நல்லதெலாம் பெறவும் எல்லையிலா
இறையருள் பெறவும் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

ஏற்கனவே இணைய உலகிலும் இதழ்களிலும் பிரசுரிக்கப்பட்ட
என் இரமதான் கட்டுரைகளை இங்கு முன்னிடுகிறேன்.

ஏற்கனவே படித்தவர்கள்என்னை மன்னியுங்கள்;
படிக்காதவர்கள்படித்து இன்புறுங்கள்; உங்களின்
பின்னூட்டங்களைஅளித்தால் என் குறைகளை
களைய இதை ஒரு வாய்ப்பாகக் கொள்வேன்.
நன்றிகள்.
அன்பு மிக,
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.


இரம்ஜான் நோன்பின் அருமை....!

இநாளை முதல் ரம்ஜான் பிறை காணப்பட்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் நோன்பு தொடங்கும்.
நமது இசுலாமியச் சகோதரர்கள் ஒரு மாதம் நோன்பு மேற்கொள்வார்கள். பகல் முழுவதும் நோன்பிருந்து மாலை நேரத்தில் நோன்பு திறந்து தொழுகைக்குப் பின்னர் உண்பார்கள். நோன்பு திறந்ததும் பள்ளி வாசல்களில்ஏழைகளுக்கு உணவு தருவார்கள். ஒரு வகையில் அன்னதானம் போல் என்று வைத்துக்கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் மிகச் சிறந்த பழக்க வழக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தேர் திருவிழா, சாஸ்த்திரங்கள் சம்பிராதாயங்கள் விரதங்கள்... அதாவது நோன்பு, என்று ஏற்படுத்திச் சென்றுள்ளனர்.
கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பாத்தா ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். வருஷம் பூராவும் காடு கழனின்னு இருக்குறவங்க ஒரு சில நாளைத் தேர்ந்தெடுத்து தேர் திருவிழான்னு கொண்டாடி தங்களைப் புதுப்பித்துக் கொள்கிற நிகழ்வாகத்தான் பண்டிகை காலம் என்று ஒதுக்கி சந்தோஷித்து இருந்திருக்கிறார்கள்.
ஒரு சாஸ்த்திரம் இல்ல சம்பிரதாயத்தை எடுத்துக் கொண்டால் அதுக்கெல்லாம் ஒரு காரண காரியமிருக்கும்.
சும்மா வேடிக்கைக்காகவோ விளையாட்டாவோ அவங்க செய்யல; இது மதத்துக்கு மதம் வேறுபடுதே ஒழிய அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும்;
ரம்சான், ரம்ஜான், ரமதான், ரமலான்,ரமழான் இப்ப‌டி இட‌த்துக்கு இட‌ம் ஒவ்வொரு வித‌மாக‌ அழைத்தாலும் இசுலாமிய‌ர்க‌ள் நாட்காட்டியின்ப‌டி இது ஒரு மாத‌ம்! ச‌ன‌வ‌ரி, பிப்ர‌வ‌ரி போன்று! ஒன்ப‌தாவ‌து மாத‌மாக‌ வ‌ருவ‌துதான் இர‌ம்சான் மாத‌ம்!

இரமலான் நோன்பு என்பது ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும் பயிற்சி. இந்த காலகட்டத்தில் மனம் கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. வியாபாரத்தில் இருப்பவர்கள், தங்கள் மனதை அளவிடவும் ஒரு சரியான சந்தர்ப்பமாக அமைகிறது.


ஆல்ப‌ர்ட்.

No comments: