Monday, September 17, 2007

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! (2)

"ஒற்றுமையோடு இருக்கறது, நல்ல காரியங்களைச் செய்யறது, தர்மம் புரிவது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, நோயாளியைச் சென்று காண்பது, நல்லவரா கெட்டவாரா என்று பாராமல் பிரேத ஊர்வலத்தில் கலந்து கொள்வது, முஸ்லீமா முஸ்லீம் அல்லாதவரா என்று பாராமல் அயலாருடன் அன்புடன் நடந்து கொள்வது. முதியவர்களுக்கு மரியாதை செய்வது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது, கோபத்தை அடக்குவது, விலக்கப்பட்டதைத் தவிர்ப்பது, உறவினர்களிடம் அன்பாய் நடந்து கொள்வது, கர்வம் கொள்ளாமல் இருப்பது....இதெல்லாம் தான் நற்பண்புகள்....."
- எம்பெருமானார் நபிகள் நாயகம்.


ஒரு ஊர்லே....

இமாம் ஒருத்தர் இருந்தார். அவர் துணி வியாபாரம் செஞ்சிக்கிட்டிருந்தார்.

பல வெளியூர்கள்லே இருந்தெல்லாம் புதுத்துணி
வகைகள் அவர் கடைக்கு வரும்.புதுப்புது ரகம் எல்லாம்
வரவழைப்பார். விற்பனை செய்வார். இது அவருடைய தொழில்.
அதனால் அவர் கடையில் வியாபாரம் எப்போதும் சுறுசுறுப்பாவே நடக்கும்.

ஒரு நாள் அவரோட கடைக்கு ஒரு வயசான அம்மா வந்தாங்க. அந்தம்மாவின் மொகத்துல ஏழ்மையின் ரேகை படர்ந்திருந்தது.
வேர்க்க விறுவிறுக்க, மேல் மூச்சு கீழ் மூச்சுவாங்க வந்தாங்க!
அவங்க கையில ஒரு பழைய பை!

அந்தப் பழைய பையில இருந்து ஒரு பழைய பட்டுச் சேலையை
வெளிய எடுத்தாங்க.அந்தச் சேலையோ ரொம்பப் பழசு!
அதை அந்த இமாம் கிட்டே காட்டி, "ஐயா... இந்தப் பழைய
சேலையை நீங்க விலைக்கு வாங்கிக்க முடியமா?" ன்னு கேட்டாங்க.

அந்தக் கடையிலே வேலை செய்யற ஊழியர் இதை வேடிக்கையா
பார்த்தார். ஏன்னா அப்படி எல்லாம் பழைய சேலையை எதுவும்
வாங்கி விக்கிறதில்ல, இமாம்.

சரி... இமாம் என்ன சொல்றார் பார்க்கலாம்-ன்னு அவரையே கவனிச்சார்.இமாம் அந்த மூதாட்டியை ஒரு தடவை ஏற
இறங்கப் பார்த்தார். அப்புறம் கேட்டார்.

"அம்மா...இந்தச் சேலைக்கு எவ்வளவு தொகை வேணும்?" ன்னு
கேட்டார்.


"இதுக்கு நூற்றியிருபது திர்காம் வேணும்!" ன்னாங்க அந்த அம்மா.

இதைக் கேட்ட இமாம் லேசா சிரிச்சிக்கிட்டே தன்னுடைய
ஊழியரைப் பார்த்தார்.

ஊழியரோ அந்த மூதாட்டியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.

இமாம் என்ன செய்திருப்பார்? மூதாட்டி கேட்ட பணம் கிடைத்ததா?

உங்கள் யூகம் சரியா?

யூகிக்க எல்லாம் நேரம் ஏதுங்கிறீங்களா?


சரி..சரி...தொடர்ந்து படியுங்கள்....

"இந்த அம்மாவுக்கு ஒரு 400 திர்ஹம் கொடுத்தனுப்பு!" ங்கறார்
அவர்.

ஊழியர் இமாமிடம் மெதுவா கேக்கறார்.

"நாமதான் பழசு பட்டு எதுவும் வாங்குறதில்ல...இருந்தும்
ஏன் இதுக்குப் போய் இவ்வளவு பணம் கொடுக்கணும்?"
அதுவும் அந்த அம்மா கேக்குறதுக்கு மேல கொடுக்கணு

மாங்கறார், அந்தப் பழைய புடவையைப் பார்த்துகிட்டே!

இப்ப அந்த இமாம் சொல்றார்:

"பேசாமே நான் சொன்னபடி செய்,
போ! நீ அந்தத் துணியைப் பார்க்கிறே!
நான் அந்த ஏழையின் வறுமையைப் பார்க்கிறேன்!" அப்படின்னார்.


அதுக்கப்புறம் அந்த ஊழியர் மறுவார்த்தை பேசல!

பணத்தைக் கொண்டாந்து அந்த அம்மாகிட்டே கொடுத்துட்டார்.

அந்த அம்மா மனசு நிறைஞ்சுது! இமாமை மனசார வாழ்த்திட்டுச்
சலாம் சொல்லிட்டு அங்கிருந்து கெளம்பினாங்க!


வறுமைக்கு ஏது விலை?

அது எல்லோருக்கும் புரியாது!

பெரியவர்களுக்குத்தான் புரியும்.

அது புரிஞ்சதுனாலேதான் அந்தப்
பெரியவர் அப்படி நடந்துகிட்டார்.


நற்பண்புகள் யாவை? அப்படின்னு எம்பெருமானார் நபிகள் நாயகம் கிட்டே கேட்டாங்களாம். அதுக்கு அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

" ஒற்றுமையோடு இருக்கறது, நல்ல காரியங்களை செய்யறது,
தர்மம் புரிவது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, நோயாளியைச்
சென்று காண்பது, நல்லவரா கெட்டவாரா என்று பாராமல் பிரேத ஊர்வலத்தில் கலந்து கொள்வது, முஸ்லீமா முஸ்லீம் அல்லாதவரா
என்று பாராமல் அயலாருடன் அன்புடன் நடந்து கொள்வது.

முதியவர்களுக்கு மரியாதை செய்வது, மன்னிப்பது, சண்டை
சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது, கோபத்தை அடக்குவது,
விலக்கப்பட்டதைத் தவிர்ப்பது, உறவினர்களிடம் அன்பாய்
நடந்து கொள்வது, கர்வம் கொள்ளாமல் இருப்பது....
இதெல்லாம் தான் நற்பண்புகள்....." அப்படின்னார் நபிகள்
நாயகம்.

இப்படிப்பட்ட நற்பண்புகள்லே ஒண்ணுதான் அந்த இமாம் அந்த
மூதாட்டிக்குச் செய்த உதவி. நமக்கு வேண்டியப்பட்டவர்கள்லே
இப்படிப்பட்ட பண்பாளர்களைப் பார்க்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு!

ஒரு கடைக்காரர்..

அவர் கடையிலே இல்லாத நேரம் பார்த்து ஒரு ஆள் வந்தான்.
வேலைக்கார பையனைப் பார்த்து. ஒரு கோழி இருக்கு, விலைக்கு வாங்கிக்கறீங்களா?ன்னு கேட்டிருக்கான்.

எவ்வளவுன்னு கேட்டிருக்கான் அவன். பத்து ரூபாதான்னான்
இவன்.
விலை ரொம்ப 'சீப்பா' யிருக்கேன்னு நினைச்சிக்கிட்டே
'சரி கோழியை கொடு' ன்னிருக்கார்.

அவன் உடனே ஒரு பேப்பரை பையிலேயிருந்து எடுத்து கொடுத்திக்கான்.அவன் 'கோழி எங்கே" ன்னான். இவன்,
"அது அந்த பேப்பர்லே போட்டிருக்கு பாரு!" ன்னான்.

அவன் பார்த்தான்.அதிலே கோழி படம் போட்டிருக்கு.
"சரி.... இந்தா பத்து ருவா" ன்னு ஒரு சீட்டைக் கொடுத்தான்.
இவன் அதை வாங்கிப் பார்த்தான்.பார்த்தா அதுலே பத்து
ரூபான்னு எழுதியிருந்தது. பேசாமே
வாங்கிக்கிட்டுப்போயிட்டான்.

இது நடந்து கொஞ்ச நேரம் கழிச்சி கடை முதலாளி திரும்பி வந்தார்.

கடையிலே இருந்த பையன் நடந்த விவரத்தை சொன்னான்.
கடைசியிலே நானும் ஒரு சீட்டுலே பத்து ரூவான்னு எழுதிக்
கொடுத்து அனுப்பிட்டேன்னான்.இதைக்கேட்டதும் அந்தக்
கடைக்காரர் பளார்ன்னு அறைஞ்சுட்டார் அந்தப் பையனை!
அவனுக்கு ஒண்ணும் புரியலே....

"நான் என்ன தப்பு பண்ணினேன் முதலாளி? நா ரூபா கூட குடுக்கல சீட்டுலதான எழுதிக்கொடுத்தேன்" ன்னான்.
"பத்து ரூவான்னு ஏண்டா சீட்டுலே எழுதிக்கொடுத்தே இப்ப அந்த சீட்டு வேஸ்ட் தானே..அதை வாயாலேயே சொல்லிருக்கலாமேடா!" அப்படின்னார்.


ஆல்ப‌ர்ட்.

No comments: